ஐபிஎல் vs பிஎஸ்எல்
அதுமட்டுமல்லாமல் ஏராளமான இளம் வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடுவதை விடவும், லீக் போட்டிகளில் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஒரு லீக் தொடருடன் மற்றொரு லீக் தொடரை ஒப்பிடும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருடன் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரை ஒப்பிட்டு பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் கூறியுள்ள கருத்து இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முகமது ரிஸ்வான் கருத்து
ஐபிஎல் தொடர் குறித்து முகமது ரிஸ்வான் கூறுகையில், சர்வதேச அளவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது கடினமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளயாடிய வீரர்களிடம், பிஎஸ்எல் தரம் குறித்து கேட்டு பாருங்கள். டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் கூட பெஞ்சில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தரம்
என்னை பொறுத்தவரை ஐபிஎல் தொடரின் தரத்தை, பிஎஸ்எல் தொடர் எப்போதோ கடந்து சென்றுவிட்டது. பிஎஸ்எல் தொடர் தொடக்கத்தில் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தானால் இப்படி ஒரு தொடரை நடத்த முடியாது என்ற பேச்சு இருந்தது. ஆனால் கடந்த சீசனில் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் ரூ.38 கோடி லாபம் ஈட்டியுள்ளனர் என்று தெரிவித்தார்.
பிஎஸ்எல் தொடர்
பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் 8வது சீசன் வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்க உள்ளது. சுமார் 40 நாட்கள் நடக்கவுள்ள போட்டிகளுக்காக, பாகிஸ்தான் ரசிகர்கள் இப்போதிருந்தே எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர். இதனிடையே பிஎஸ்எல் தொடரோடு, ஐபிஎல் தொடரை ஒப்பிட்டு முகமது ரிஸ்வான் பேசிய கருத்துக்கு, இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.