சொல்லித் தர போகலைப்பா
இதுகுறித்து சாஸ்திரி கூறுகையில், நான் இந்திய அணிக்கு பாடம் நடத்தப் போகவில்லை. மாறாக உண்மையைக் கண்டறியும் நோக்கத்துடன் போவதாகத்தான் கொள்ள வேண்டும்.
பிளட்சருடன் பேசுவேன்
நான் பயிற்சியாளர் டங்கன் பிளட்சருடன் பேசி, அணியின் மோசமான தோல்விக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முயற்சிப்பேன்.
லார்ட்ஸ் வெற்றி என்னாச்சு
லார்ட்ஸ் மைதானத்தில் நாம் மிகப் பிரமாதமான வெற்றியைப் பெற்றோம். ஆனால் அதற்கு அடுத்த 3 போட்டிகளில் மிக மோசமாக தோற்றுள்ளோம். இதற்கான காரணத்தை நான் ஆராய வேண்டியுள்ளது.
தப்பு என்ன
இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் போலவே நானும் என்ன தவறு நடந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளேன். அதைச் சரி செய்ய முயற்சிப்பேன்.
எதிர்காலம் எப்படியோ
பிளட்சருக்கு அடுத்து நீங்கள்தான் பயிற்சியாளரா என்று கேட்டால் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. எதிர்காலத்தை என்னால் இப்போதே கூற முடியாது. அதைப் பற்றி நான் நினைக்கவும் இல்லை. இப்போது நிலைமை சரியில்லை. அதை சரி செய்ய வேண்டியதுதான் முக்கியமானது.
முதல் வேலை ரிப்போர்ட் செய்ய வேண்டியது
என்னுடைய முதல் வேலை நடந்தது என்ன என்பதை ஆராய்ந்து கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை கொடுப்பதுதான். அதைப் பற்றி மட்டுமே இப்போது நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
15 நாளில் ஒன்றும்....
அடுத்த 15 நாட்களுக்குள் இந்திய அணியில் மிகப் பெரிய மாயாஜாலம் நடந்து விடும். நான் அதைச் செய்வேன், அணி அதைச் செய்யும் என்று தயவு செய்து யாரும் எண்ண வேண்டாம். அது நடக்கவும் சாத்தியமில்லை. சிறப்பான தொடராக வருகிற ஒரு நாள் தொடர் அமையும் என்று அனைவரையும் போல நீங்களும் நம்புங்கள் என்றார் சாஸ்திரி.