For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு தரக் கூடாது.. திடீரென்று போர் கொடி தூக்கிய ரவி சாஸ்த்ரி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் உம்ரான் மாலிக்கை சேர்க்க கூடாது என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி போர் கொடி தூக்கியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு மோசமான பந்துவீச்சு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால், உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அட பாவமே.. இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா? வினையாக முடிந்த விளையாட்டு..பாபர் அசாம்க்கு நடுவர் வைத்த ஆப்புஅட பாவமே.. இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா? வினையாக முடிந்த விளையாட்டு..பாபர் அசாம்க்கு நடுவர் வைத்த ஆப்பு

ரசிகர்களின் ஆசை

ரசிகர்களின் ஆசை

காரணம், உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசக்கூடியவர். பயிற்சியின் போது கூட 163 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி அசத்தினார். இதனால் உம்ரான் மாலிக்கை விரைவில் இந்திய அணியில் சேர்த்து உலகக் கோப்பை தொடருக்கு தயார் படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரவி சாஸ்த்ரி கருத்து

ரவி சாஸ்த்ரி கருத்து

டி20 உலககோப்பை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் , உம்ரான் மாலிக் அணியில் இருப்பது அவசியம் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருதுகின்றனர். இந்த நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். அதன் படி, உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க கூடாது என்று கூறியுள்ளார்.

வாய்ப்பு வழங்க கூடாது

வாய்ப்பு வழங்க கூடாது

உலகக் கோப்பை தொடரிலும் விளையாட வாய்ப்பு வழங்க கூடாது என்று அவர் கூறியுள்ளார். உம்ரான் மாலிக் தற்போது தான் அவர் வளர்ந்து வருகிறார். அவரை இந்திய அணியில் சேர்த்து சீனியர்களுடன் பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும். ஆனால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு தரக்கூடாது.

தயாராகவில்லை

தயாராகவில்லை

முதலில், உம்ரான் மாலிக் 50 ஓவர் போட்டியில் விளையாட வைக்க வேண்டும். தேவைப் பட்டால் டெஸ்ட் போட்டிக்கு தயார் படுத்த வேண்டும். அவசரப்பட்டு இன்னும் 4 மாதத்தில் தொடங்க உள்ள டி20 உலக கோப்பையில் சேர்க்க கூடாது. உம்ரான் மாலிக்கை இன்னும் பட்டை தீட்ட வேண்டும். அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகவில்லை என்று ரவி சாஸ்த்ரி கூறி உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 11, 2022, 21:17 [IST]
Other articles published on Jun 11, 2022
English summary
Ravi shastri feels umran malik is not yet ready for international cricket உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு தரக் கூடாது.. திடீரென்று போர் கொடி தூக்கிய ரவி சாஸ்த்ரி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X