
மாறும் வீரர்கள்
குறிப்பாக தொடக்க வீரர் கேஎல் ராகுல் காயம் காரணமாக கடந்த சில தொடரில் விளையாடவில்லை. இதனையடுத்து, அந்த இடத்துக்கு இந்திய அணி ஒரு சில வீரர்களை களமிறக்கியது. முதலில் இணான் கிஷன் அந்த இடத்தில் விளையாடினார். பிறகு, இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் டி20 அணியில் தொடக்க வீரராக களமிறங்கினார்.

புதிய பொறுப்பு
இந்த நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக களமிறக்கியது. நடுவரிசையில் விளையதடிய வீரரை தொடக்க வீரராக களமிறங்கியதும், குழம்பிய அவர் முதல் 2 போட்டியையும் சேர்த்து 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். 3வது டி20 போட்டியில் அவர் அரைசதம் அடித்தாலும், இந்தியாவின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்கள் குற்றஞ்சாடடியுள்ளனர்.

நடுவரிசை
இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, சூர்யகுமார் நிச்சயம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நீடிப்பார். ஆனால் சூர்யகுமாரின் இடம் நடுவரிசை தான். அப்படி இருக்கும் போது அவரை தொடக்க வீரராக களமிறக்கியது சரி அல்ல. அவர் செம பார்மில் இருக்கிறார். தற்போது தொடக்க வீரராக இறக்கிட்டு, ராகுல் வந்தவுடன் சூர்யகுமாரை எப்படியும் நடுவரிசையில் தான் களமிறக்குவீர்கள்.

ரவி சாஸ்த்ரி கோரிக்கை
இதனால் ரோகித் எடுத்த முடிவு தவறு. தொடக்க வீரராக ரிஷப் பண்ட் போன்ற வீரரை களமிறக்கி மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். சூர்யகுமாருக்கு 5வது இடத்தில் கூட பேட்டிங் செய்ய அனுப்புங்கள். தொடக்க வீரராக மாற்றுவதன் மூலம், அது நிலையற்ற தன்மையை அவரது மனதில் உருவாக்கிவிடும் என்று ரவி சாஸ்த்ரி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











