என்ன அடித்து இருந்தார்
இந்த உலகக் கோப்பை தொடரில் 8 லீக் போட்டிகள் (1 ஆட்டம் மழையால் ரத்து) உட்பட இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடியது. இந்த 9 போட்டிகளில் 5 சதங்களை இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அடித்து இருந்தார். அவர் மொத்தம் இந்த தொடரில் 648 ரன்கள் எடுத்தார்.
அடுத்தது என்ன
அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இருந்தார். இவர் 647 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த இடத்தில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் இருந்தார். இவர் 606 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 549 மற்றும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 548 ரன்கள் எடுத்து இருந்தனர்.
இல்லை
இதில் இன்று ஜோ ரூட் மற்றும் வில்லியம்சன் இருவருக்கும் ரோஹித் சர்மாவை முந்த வாய்ப்பு இருந்தது. இன்றைய போட்டியில் இருவரும் செஞ்சுரி போட்டு இருந்தால் ரோஹித் சர்மாவை முந்தி இருப்பார்கள். ஆனால் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்து 578 ரன்களோடு உலகக் கோப்பை தொடரை முடித்துள்ளார். அதேபோல் ஜோ ரூட் 7 ரன்கள் எடுத்து 556 ரன்களோடு ஆட்டத்தை முடித்துள்ளார்.
என்ன சாதனை
இதனால் தற்போது உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ஆம் இனி இந்த தொடரில் எந்த வீரரும் அவரின் சாதனையை முறியடிக்க முடியாது. ரோஹித் சர்மா அடித்த 648 ரன்கள்தான் இந்த தொடரில் அதிகபட்ச ரன்கள் ஆகும்.