சூர்யகுமாரின் அதிரடி
ஆசிய கோப்பை தொடர் முதல் யாராலும் தடுக்க முடியாத ஃபார்மில் இருக்கும் அவர் இந்த போட்டியில் 51 பந்துகளில் 111 ரன்களை விளாசி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவரை எப்படி தடுப்பது என்பது தெரியாமல் நியூசிலாந்து பவுலர்கள் கடைசி வரை விக்கெட்டே எடுக்கவில்லை. நியூசிலாந்து மட்டுமின்றி மற்ற நாட்டு பவுலர்களும் திணறி வருகின்றனர்.
டெய்லர் தந்த யோசனை
இந்நிலையில் சூர்யகுமார் யாதவை கட்டுப்படுத்த ராஸ் டெய்லர் யோசனை கூறியுள்ளார். அதில், சூர்யகுமார் நல்ல ஃபார்மில் இருந்தால் எந்த பந்து போடுவது என்ற குழப்பம் இருக்கும் தான். எனவே முடிந்தவரை நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனை ஸ்ட்ரைக்கிற்கு கொண்டு வரப்பாருங்கள். அவர்களை விக்கெட் எடுக்க வேண்டும், இல்லையெனில் அவரை வைத்தே ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். ஸ்ட்ரைக் மட்டும் ரொட்டேட் ஆக கூடாது.
என்ன காரணம்
சூர்யகுமார் யாதவும் ஒரு மனிதர் தான். நிச்சயமாக தவறுகளை செய்வார். தனக்கு ஸ்ட்ரைக் கிடைக்கவில்லையே என அவர் சற்று ஆதங்கப்பட்டாலும், அடுத்த பந்தில் தவறு செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவரை மனரீதியாக கட்டுப்படுத்துவதே முக்கியமான ஒன்று எனக்கூறியுள்ளார். இதெல்லாம் நடப்பதற்கு 50% தான் வாய்ப்பு இருக்கும். ஆனால் அதனை விட்டுவிடாமல் பவுலர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மெல்பேர்னே அதிர்ந்தது
தொடர்ந்து 3வது டி20 போட்டி குறித்து பேசிய அவர், சூர்யகுமார் யாதவ் மெல்பேர்ன் போன்ற பெரிய மைதானத்திலேயே சிக்ஸர்களை விளாசினார். பந்து 10 - 15 இருக்கை வரிசைகளை தாண்டி சென்றது.அதே போன்ற வேகத்தை மெக்லீன் பார்க் மைதானத்தில் காட்டினால், பந்துகள் ஸ்டேடியத்தை விட்டு வெளியே தான் செல்லும் என ராஸ் டெய்லர் எச்சரித்துள்ளார்.