மும்பை: கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்டுள்ள தடையால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ. 22.9 கோடி ரூபாயும், டேவிட் வார்னருக்கு 19.4 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பேரை கெடுக்கும் வகையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 12 மாதங்கள் தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து 2018 ஐபிஎல் தொடரிலும் இந்த இரண்டு வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. இந்த தடை தொடர்ந்தால் ஸ்மித், வார்னர் மற்றும் பேன்க்ராஃப்ட் ஆகியோர் சர்வதேச அளவில் 12 டெஸ்ட் போட்டிகள், 26 ஒரு நாள் போட்டிகள், மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழப்பார்கள்.
இதனால் அவர்கள் பணப்பையும் வெயிட் குறைந்துவிடும். இந்த தடையால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ. 22.9 கோடி ரூபாயும், டேவிட் வார்னருக்கு 19.4 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், சன் ரைசர்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னரும் விலகியது குறிப்பிடத்தக்கது.