தடுமாறிய இங்கிலாந்து
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சொபியா 5 ரன்களிலும், டேனி வியாட் 6 ரன்களிலும், அலைஸ் கேப்சி 4 ரன்களிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 16 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.
54 ரன்களுக்கு 5 விக்கெட்
இதனையடுத்து ஏமி ஜோன்ஸ், பிராமி ஸ்மித் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி எடுத்தனர். ஆனால், இவ்விருவர்களையும் ரானா ஒரு ஓவர் இடைவெளியில் அடுத்தடுத்து வீழ்த்த இங்கிலாந்து அணி 54 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளையும் இழந்து விளையாடியது.
17 வயது வீராங்கனை
இறுதியில், இங்கிலாந்து அணியின் 17 வயதே ஆள வீராங்கனை கெம்ப் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 142 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது. 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.
ஸ்மிருதி மந்தனா அபாரம்
தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்து பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதற அடித்தார். 53 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஸ்மிருதி மந்தனா 79 ரன்களை விளாசினார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். ஹர்மன்பிரித் கவுர் 22 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.