உயர்ந்த ஸ்கோர்
டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி ஹர்சல் பட்டேலை நீக்கிவட்டு, ஆர்ஸ்தீப் சிங்கிற்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு கொடுத்தார். ஆனால் இலங்கை வீரர்கள் அவருடைய ஓவரில் அதிரடி காட்டினர். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
குசேல் மெண்டிஸ் அரைசதம்
தொடக்க வீரர் குசேல் மெண்டிஸ் 27 பந்தில் அரைசதம் அடித்து, இந்திய வீரர்களுக்கு நாக் அவுட் பஞ்ச் கொடுத்தார். இந்த நிலையில் நிசாங்கா பொறுமையாக விளையாடி 33 ரைன்கள் எடுத்தார். நிசாங்காவின் ஸ்பெசலிட்டியே, முதலில் பொறமையாக விளையாடி பிறகு சிக்சர், பவுண்டரியை விளாசி பெரிய ஸ்கோரை அடிப்பது தான்.
நிசாங்கா பிளான்
கிட்ட தட்ட நமது கேஎல் ராகுல் போல என்று வைத்து கொள்ளுங்கள். இதனால் நிசாங்கா அடித்து ஆடுவார் என ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேலை பந்துவீச அழைத்தார். அப்போது அக்சர் பட்டேல் பந்தை சிக்சருக்கு நிசாங்கா தூக்கி அடித்தார். எப்போதும் பவுண்டரி லைனில் ஆள் இல்லாத இடத்தை பார்த்தே , பேட்ஸமேன்கள் அடிப்பார்கள். அது சிக்சர், பவுண்டரிக்கு நூற்றுக்கு 99 முறை சென்றுவிடும்.
அபார கேட்ச்
ஆனால், ஒரு முறை எப்படியாவது ஃபில்டர்கள் ஓடி வந்து பிடித்துவிடுவார். அப்படி ஒரு முறை தான் இன்று நடந்தது. நிசாங்கா அடித்த பந்தை சரியாக கணித்து ஓடி வந்து அறிமுக வீரர் ராகுல் திரிபாதி கீழே விழுந்து கேட்ச் பிடித்தார். நல்ல வேளையாக பவுண்டரி லைனில் கை, காலில் ஏதும் படவில்லை. இதனை பார்த்த உடன் அக்சர் பட்டேலும், ஹர்திக் பாண்டியாவும் சிரித்து கொண்டாடினர்.