இது தொடர்பாக ஐபி எல தலைவர் ராஜிவ் சுக்லாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வினோத் தவாடே நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மும்பை மைதானத்தை சீரமைக்க பல்லாயிரம் லிட்டர் நீரை பயன்படுத்த வேண்டியது இருக்கும். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த நூற்றாண்டில் இதுவரை ஏற்படாத வறட்சி நிலவி வருகிரது. இந்நிலையில் நீரை வீணாக்குவது சரியானது அல்ல.
ஐபிஎல் அணிகள் வறட்சி பாதித்த மகாராஷ்டிராவுக்கு நிவாரண உதவி கோருகின்றன. நிவாரண நிதியா? தண்ணீரா?என்றால் நிச்சயச்மாக தண்ணீருக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஹோலி பண்டிகையன்று அசாராம் பாபு டன் கணக்கிலான நீரை வீணாக்கிவிட்டார். இது போல் நீரை வீணாக்குவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகள் பலவும் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மும்பையில் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.