நாடு திரும்பும் வீரர்கள்
அதன் காரணமாக, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடக்கும் சர்வதேச தொடர்களிலும் மற்றும் உலக கோப்பை பயிற்சிகளிலும் ஈடுபட நாடு திரும்பி வருகின்றனர். ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து எதிரான தொடரில் ஆட தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்டோக்ஸ், பட்லர்
குறிப்பாக ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய மூவரும் நாடு திரும்பி பெரும் வெற்றிடத்தை உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நன்கு துவக்கம் அமைத்து வந்த பெயர்ஸ்டோவ் நாடு திரும்பியுள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது.
நாடு திரும்புகிறார்
தற்போது அந்த அணிக்கு மற்றொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்று பஞ்சாப் அணியை எதிரான போட்டிக்கு பிறகு அணியின் துவக்க வீரர் மற்றும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான டேவிட் வார்னர் நாடு திரும்புகிறார்.
தொடரும் இழுபறி
இவர் இதுவரை ஆடியுள்ள 11 போட்டிகளில் 611 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அதில் 7 அரைசதங்கள் அடங்கும். ஏற்கனவே, சன்ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? தகுதி பெறாதா? என்ற இழுபறி இருக்கிறது. இத்தகைய சூழலில் தற்பொழுது டேவிட் வார்னர் வெளியேறுவது பெரும் அதிர்ச்சியாக இருக்கும். வார்னர் இல்லாத போட்டிகளில் ஹைதராபாத் அணி எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.