செப்டம்பர் 12ம் தேதி
செப்டம்பர் 12ம் தேதி இந்த மோதல் நடந்தது. இப்போட்டியில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு வீரர்களைத் தாக்கியதாக 36 வயது விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன் என்பவருக்கு ஆயுள் கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலில் வாய் வார்த்தை
போட்டியின்போது ஜேசன் ஆண்டர்சனுக்கும், எதிர்த் தரப்பு வீரர் ஜார்ஜ் ஓ பிரையனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பிரையன் பேட் செய்து கொண்டிருந்தபோது ஜேசன் அவரிடம் ஏதோ கோபமாக பேசியபடி வந்தார்.
தலையில் ஒரே போடு
பேசிக் கொண்டிருக்கும்போதே ஜேசன், பிரையன் மீது கையை வைத்து விட்டார். அவரது தலையில் பின்னால் இருந்தபடிபலமாக குத்தினார். பதிலுக்கு பிரையனும் அடிக்க.. அவ்வளவுதான் பரபரப்பாகி விட்டது.
சரமாரி அடி
பிரையன் சற்று அமைதி காத்தார். ஆனால் ஜேசன் விடவில்லை. வேகமாக ஓடி வந்து பேட்டால் தாக்கினார். பிரையனை கீழே தள்ளி காலால் உதைத்தார். பதிலுக்கு பிரையனும் அடித்தார். ஆனால் ஜேசனின் பலத்திற்கு முன்னால் பிரையனால் பதில் தாக்குதல் நடத்த முடியவில்லை.
போலீஸ் போலீஸ்
நிலைமை மோசமாகவே கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஓடி வந்தனர். சில வீரர்களும் விலக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்கள் வந்து விலக்கி விட்டனர்.
ஆண்டர்சன் வெளியேற்றம்
இந்த மோதலைத் தொடர்ந்து ஆண்டர்சன் வெளியேற்றப்பட்டார். பின்னர் ஆட்டம் தொடர்ந்தது. அதில், கிளீவ்லாந்து அணி வெற்றி பெற்றது.
வாழ்நாள் தடை
போட்டி முடிவில் மோதலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. மோசமாக நடந்து கொண்டதற்காக ஆண்டர்சனுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பிரையனுக்கும் 6 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது.