கோலி ஓய்வு
இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலிக்கு முற்றிலுமாக ஓய்வு தரப்பட்டது. இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கோலி, ஒருமாத ஓய்வுக்கு பின்னர் ஆசியக்கோப்பை தொடரில் கம்பேக் தருவார் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அந்த திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டன.
பிசிசிஐ திட்டம்
இந்திய அணி ஆசியக்கோப்பைக்கு முன்னதாக ஆகஸ்ட் 18 - 22ம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடராக ஜிம்பாவேவுடன் மோதுகிறது. இந்த தொடரில் இந்தியாவின் இளம்படை பங்கேற்கும் சூழலில் கோலியும் அதில் கலந்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிய அணிகளுடன் விளையாடி ஸ்கோர் அடித்தால் கூட கோலிக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என திட்டத்தில் இதனை செய்துள்ளனர்.
கோலியின் தவறு
இந்நிலையில் இந்த விஷயத்தில் தான் கோலி தவறு செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி கம்பேக் தர அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் அவருக்கு பேட்டிங் செய்ய மிகவும் பிடித்தமான அணி வெஸ்ட் இண்டீஸ் ஆகும். இதற்கு சான்று, அந்த அணியுடனான கோலியின் ரெக்கார்ட்கள் தான்.
தரமான ரெக்கார்ட்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் விராட் கோலி தான். அந்த அணியுடன் இதுவரை 42 ஒருநாள் போட்டிகளில் கோலி விளையாடியுள்ளார். அதில் 2,261 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 9 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும். கோலியின் சராசரி 66.50 ரன்கள் ஆகும். இப்படிப்பட்ட அணியுடன் கோலி, தாமாக ஓய்வு கேட்டுவிட்டு விடுமுறையில் இருந்து வருகிறார் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.