ஐசிசி சொல்லட்டும்
எனக்கு செய்தித் தாள்களில் வரும் விஷயங்களில் நம்பிக்கை இல்லை. அதை பொருட்படுத்துவதும் இல்லை. நான் பேப்பர் படிப்பதும் இல்லை. ஐசிசி சொல்ல வேண்டும். அதை மட்டுமே நான் மதிக்க முடியும்.
உண்மை இருந்தால்
புகாரில் கொஞ்சமாவது உண்மை இருந்திருந்தால் நிச்சயம் ஐசிசி என்னிடம் விசாரித்திருக்கும். பேசியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது தொடரிலிருந்து எங்களது கவனத்தைத் திசை திருப்ப நடக்கும் முயற்சியாகும்.
ஆஸ்திரேலியாவிலும் நடந்தது
இதுபோன்ற திசை திருப்பும் வேலை தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரின்போதும் கூட நிகழ்ந்தது. ஆனால் இங்கு யாரும் விசாகப்பட்டனம் போட்டி முடியும் வரை இதுகுறித்துப் பேசவே இல்லை.
ஐசிசி முடிவே இறுதியானது
செய்தித் தாள்களின் செய்தியை விட ஐசிசியின் முடிவுதான் இறுதியானது, முடிவானது. அதை மட்டுமே என்னைப் போன்ற வீரர்கள் ஏற்க முடியும். எனவே இதுகுறித்து நான் கவலைப்படவில்லை. சிரித்து விட்டுப் போய் விடுவேன் என்றார் கோஹ்லி.
என்ன செஞ்சேன்
அப்படியும் விடாத இங்கிலாந்து நாட்டு செய்தியாளர் ஒருவர், பாப் டுபிளஸிஸ் செய்ததையே நீங்களும் செய்தீர்களா என்று கேட்டபோது கோஹ்லி பட்டென்று, நான் என்ன செய்தேன் என்று திருப்பிக் கேட்டார். இதற்கு இங்கிலாந்து செய்தியாளர் பதிலளிக்கவில்லை.