ஷாயிக் ரஷித்
இதனையடுத்து கைவசம் இருந்த பணத்தை வைத்து, எதிர்காலத்தை கொண்ட இரண்டு இளம் வீரர்களை சிஎஸ்கே அணி தட்டி தூக்கியது. ஐதராபாத்தை சேர்ந்த 18 வயது வீரரான ஷாயிக் ரஷித் , அண்டர் 19 உலககோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பையும் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
திறமை வாய்ந்தவர்
ஐதராபாத்தை சேர்ந்தவர் என்பதால், முகமது அசாரூதீன், விவிஎஸ் போன்றோரின் பேட்டிங் ஸ்டைலும் ஷாயிக் ரஷித்துக்கு உள்ளது, அண்டர் 19 உலககோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 94 ரன்கள் அடித்து இருக்கிறார். ரஞ்சி போட்டியிலும் விளையாடிய அனுபவம் இருக்கிறது. நெருக்கடியான கட்டத்தில் விளையாடக் கூடியவர்.
நிசாந்த் சிந்து யார்
நிசாந்த் சிந்து யார் தோனியின் கீழ் அவர் பட்டை தீட்டப்பட்டால் சிஎஸ்கேக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் அது நல்லது. இதனைத் தொடர்ந்து மற்றொரு அண்டர் 19 வீரரான ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்துவை சிஎஸ்கே 60 லட்சம் ரூபாய் கொடுத்து தட்டி தூககியது. இவர் அண்டர் 19 உலக கோப்பையில் பேட்டிங்கில் அரைசதம் அடித்ததுடன், பந்துவீச்சிலும் கலக்கி இருக்கிறார்.
ரஞ்சியில் சதம்
தற்போது ரஞ்சி கோப்பையிலும் பரோடாவுக்கு எதிராக சதம் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஹரி நிசாந்தின் பந்துவீச்சும் சிஎஸ்கே வின் ஆடுகளத்திற்கு சிறப்பாக உதவும். இதன் மூலம் 2 இளம் வீரர்களை மொத்தமே 80 லட்சம் ரூபாய் செலவு செய்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது மாஸ்டர் மூவாக கருதப்படுகிறது.