வாய்ப்பு இல்லை
இந்திய அணியில் டோணி, தினேஷ் கார்த்திக் இரண்டு பேரும் ஒன்றாகவே சேர்ந்தார்கள். ஆனால் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பும், பெருமையும் இன்னொருவருக்கு கிடைக்கவில்லை. 2004 செப்டம்பர் மாதம் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ந்தார். அதே வருடம் டிசம்பர் மாதம் டோணி இந்திய அணியில் சேர்ந்தார். அணியில் சேர்ந்ததில் இருந்து டோணி பெரிய வீரராக வளர்ந்தார்.
யார் கேப்டன் ஆவது
டோணிக்கு முன்பு தினேஷ் கார்த்திக்குக்கு கேப்டன் வாய்ப்பு இருந்தது. இந்திய அணி கங்குலி, டிராவிட் இல்லாமல் கஷ்டப்பட்ட போது தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிக்கலாம் என்று கிரேக் சாப்பல் கூறியிருந்தார். ஆனால் அவர் கேப்டனாக அறிவிக்கப்பட இருந்த சமயத்தில் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு டோணிக்கு சென்றது, ஆனால் அதில் இந்திய அணிக்கு கோடி நன்மை கிடைத்தது வரலாறு.
அணியில் இல்லை
இருவரும் கீப்பர் என்பதால் தினேஷ் கார்த்திக்கின் வாய்ப்பு அப்படியே குறைந்து போனது. வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட தினேஷ் கார்த்திக் பார்ம் அவுட்டாகியும் கஷ்டப்பட்டார். இதனால் இந்திய அணிக்கு வரமுடியாமல் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பெரிய அளவில் கஷ்டப்பட்டார்.
நிரூபணம்
கடைசியாக நடந்த இரண்டு தொடர்களிலும் தினேஷ் கார்த்திக் தன்னை நிரூபித்துள்ளார். இவர் இந்திய உலகக் கோப்பை அணியில் எப்படியும் இருப்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் பெரியவரா, டோணி பெரியவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் டோணி உலகக் கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இன்று
இந்த நிலையில் 10 வருடமாக இருக்கும் இந்த கேள்விக்கு இன்று பதில் கிடைக்க உள்ளது. சென்னையும், கொல்கத்தாவுக்கு மோதும் போட்டியில் இரண்டு பேரின் தலைமைப்பண்பும் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதே சமயம் இருவரின் தனிப்பட்ட ஆட்டமும் கூட ஒப்பிட்டு பார்க்கப்படும். இதனால் இந்த போட்டி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.