ஐபிஎல் அதிரடி
இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் செம பார்மில் இருந்தார்கள். ஐபிஎல் தொடரில் தோனி 15 போட்டிகளில் 416 ரன்கள் குவித்தார். அவரது சராசரி - 83.20. ஸ்ட்ரைக் ரேட் - 134. ஆண்ட்ரே ரஸ்ஸல் 14 போட்டிகளில் 510 ரன்கள் குவித்தார். அவரது சராசரி - 57. ஸ்ட்ரைக் ரேட் - 205.
பயிற்சியில் ஸ்ட்ரைக் ரேட்
உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் இருவருமே கிட்டத்தட்ட இதே ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினர். தோனி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் - 144, ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் - 216. சொல்லப் போனால், ஐபிஎல் தொடரின் ஸ்ட்ரைக் ரேட்டை விட கொஞ்சம் அதிகம்.
ஐபிஎல்தான் முடிஞ்சு போச்சே
ஒருநாள் போட்டிகளிலும், அனுபவ வீரர்கள் தோனி, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஐபிஎல் போல ஆடி வருவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சிலர் "என்னப்பா.. ஐபிஎல்தான் முடிஞ்சு போச்சே.. அப்புறம் ஏன் இப்படி ஆடுறீங்க?" என கேட்டு தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
நீண்ட நேர ஆட்டம்
ரஸ்ஸல் கடைசி 10 ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டும் என அடித்து ஆடினார். ஆனால், தோனி, 23வது ஓவர் முதல் 49.2வது ஓவர் வரை களத்தில் நீண்ட நேரம் நின்று, அதிரடியாக ஆடினார்.
ஆடுகளம்
2019 உலகக்கோப்பை தொடரில் ஐபிஎல் தொடர் போல தோனி, ரஸ்ஸல் இன்னும் பல வீரர்கள் ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து ஆடுகளங்கள் தட்டையாக இருப்பதுதான்.
அதிரடியாக ஆடலாம்
அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதுதான். இந்த ஆடுகளங்களில் முதல் சில ஓவர்களை கடந்து விட்டால், அதன் பின் அதிரடி காட்டலாம் என கூறப்படுகிறது. அதிரடி ஆட்டத்தை விரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனி குஷிதான்.