
லண்டன்: ஆப்பிரிக்க நாடான ஜிம்ப்பாவேவின் கிரிக்கெட் அணி மிகப் பெரிய சிக்கலில் உள்ளது. வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிதி சிக்கலில் அதன் கிரிக்கெட் வாரியம் உள்ளது. அதனால், கடன் கொடுக்கும்படி, ஐசிசியிடம் கேட்டுள்ளது.
டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டியில் விளையாடும் அந்தஸ்து பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி, ஒரு காலத்தில், மற்ற அணிகளுக்கு சவாலாகவே இருந்தது.

இதனிடையில், வரும் ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வேயில் 2 டெஸ்ட்கள், 5 ஒருதினப் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணி செல்ல உள்ளது. நிதி நெருக்கடி உள்ளதால் அந்தப் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 3 டி-20 போட்டிகளில் விளையாட ஜிம்பாப்வே அணி வர உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதுவும் நடக்குமா என்பது சந்தேகமே.