டெல்லி: தொடர்ந்து தோல்வி அடைந்ததால், புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த டெல்லி டைனமோஸ் அணி, 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற, எப்சி மும்பை சிட்டி அணியின் அரை இறுதி கனவு பணால் ஆனது. அதே நேரத்தில், சென்னையின் எப்சி அணியினர் வயிற்றில் இந்தப் போட்டி பால் வார்த்தது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 4வது சீசன் அரை இறுதி சுற்றை எட்டியுள்ளது. பெங்களூரு எப்சி, எப்சி புனே சிட்டி அணிகள் அரை இறுதிக்குள் ஏற்கனவே நுழைந்தன.