சாதாரண போட்டியா
1950ல் பிரேசில் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும்படி இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு பிரேசில் அழைப்பு விடுத்தது. பயணச் செலவை ஏற்பதாகவும் கூறியது. ஆனாலும் இந்தியா மறுத்தது. அந்த உலகக் கோப்பைதான் 4வது உலகக் கோப்பையாகும். அந்த நேரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை ஒலிம்பிக் போட்டிதான் மிகவும் முக்கியமான, பெரிய போட்டியாகும்.
நீண்ட தூர பயணம்
இங்கிருந்து பிரேசிலுக்கு நீண்ட தூரம் கப்பலில் பயணிக்க வேண்டியிருந்தது. இந்த ஒரு `சின்ன' போட்டிக்கு அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்று அந்தப் போட்டியில் பங்கேற்க இந்தியா மறுத்துள்ளது. நீண்ட தூரப் பயணத்தை காரணம் காட்டி துருக்கியும் அந்த உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. ஐரோப்பிய அணிகளான ஸ்காட்லாந்து, அயர்லாது, போர்ச்சுகள், பிரான்ஸ் போன்றவையும் அந்த உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை.
வாய்ப்பு வந்தது எப்படி
மேலும் இந்திய கால்பந்து அணி 70 நிமிடங்கள் கொண்ட போட்டிகளிலேயே விளையாடியுள்ளது. 90 நிமிடப் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இல்லை. அதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது. ஆசியாவில் இருந்து பெரும்பாலான அணிகள் பங்கேற்காததால், இந்தியாவுக்கு அப்போது அழைப்பு விடுக்கப்பட்டது.
வெறும் காலில் விளையாடினர்
1948ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஷூ போடாமல் தான் விளையாடியது. ஆனால் பின்லாந்தில் நடந்த அதற்கடுத்த ஒலிம்பிக்கில் ஷூ இல்லாமல் கடும் குளிரில் விளையாட முடியாமல் இந்திய அணி தவித்தது. அதன்பிறகே ஷூ அணிவது கட்டாயமாக்கப்பட்டது.