பாக்தாத் : ஈராக் கால்பந்து அணி ஏசியன் கேம்ஸில் விளையாடுவதில் இருந்து பின்வாங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஏசியன் கேம்ஸ் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஈராக் கால்பந்து அணியின் நிலைப்பாடு, கால்பந்து தொடரின் அட்டவணையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சில நாட்கள் முன்பு, அதிக வயதுடைய வீரர்களை பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள் அணியில் சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஈராக் கால்பந்து அணியின் அதிகாரிகள் சிலர், பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்தே ஏசியன் கேம்ஸில் இருந்து பின்வாங்கும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.