போட்டிகள்...
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு லீக்கில் முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இறுதிப் போட்டி
அரை இறுதிபோட்டி இரண்டு சுற்றுகளை கொண்டதாகும். இதில் கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
முதல் போட்டி
குவஹாத்தி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.
தொடக்க விழா
முதலாவது லீக் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற்றது. ஐ.எஸ்.எல். தலைவர் நீத்தா அம்பானி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இந்தி நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் டோணி உள்பட பலர் பங்கேற்றனர்.