கடும் போட்டியில் நான்கு அணிகள்
தற்போதைய நிலவரப்படி, நான்கு அணிகள், 29 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. அதாவது அடுத்து டெல்லி டைனமோஸ் அணியுடன் எப்சி புனே சிட்டி தோல்வியடைத்தால், அது 29 புள்ளிகளுடன் இருக்கும். அது போல, எப்சி மும்பை சிட்டிக்கு எதிராக சென்னையின் எப்சி தோல்வியடைந்தாலும், கோவா சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றாலும், மும்பை சிட்டி தனது அடுத்த இரண்டு ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிகளு 29 புள்ளிகளுடன் இருக்கும்.
அரை இறுதியில் சென்னையின் எப்சி
இவ்வாறு நான்கு அணிகள், ஒரே புள்ளியில் இருக்கும்போது, ஒவ்வொரு அணியும், எதிர் அணியுடன் விளையாடிய போட்டியின் முடிவு அடிப்படையில், கணக்கிடப்படும். அதன்படி, மும்பை சிட்டி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணியை வென்றதன் அடிப்படையில் எப்சி புனே சிட்டி அரை இறுதிக்கு தகுதி பெறும். அப்போது சென்னையின் எப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகளும் அரை இறுதிக்கு நுழைந்துவிடும்.
அரை இறுதிக்கு நுழைந்தது
ஒரு வேளை எப்சி கோவா, அடுத்து விளையாட உள்ள ஏடிகே மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வென்றால், அது 30 புள்ளிகளைப் பெறும். அப்போது, 29 புள்ளிகளுடன் மூன்று அணிகள் இருக்கும். அப்போதும் எப்சி புனே சிட்டி தகுதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.
அரை இறுதிக்கு நுழைவது யார்
தற்போதைய நிலையில், பெங்களூரு எப்சி மற்றும் எப்சி புனே சிட்டி அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள அணிகளுக்கு தான் அடுத்தப் போட்டிகள் மிகவும் முக்கியமானவை. அடுத்ததாக, இன்று நடக்கும் ஆட்டத்தில், மும்பை சிட்டி - டெல்லி டைனமோஸ் மோதுகின்றன. நாளை, எப்சி கோவா - ஏடிகே அணிகள் மோதுகின்றன. மார்ச் 1ம் தேதி பெங்களூரு எப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ், 2ம் தேதி புனே சிட்டி - டெல்லி டைனமோஸ் , 3ம் தேதி சென்னையின் எப்சி - மும்பை சிட்டி, 4ம் தேதி ஜாம்ஷெட்பூர் - கோவா மற்றும் ஏடிகே - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.