பிரேசில் vs ஜெர்மனி
ஆம்! 2002ல் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், சரிக்கு சமமான பலத்துடன் விளங்கிய பிரேசில், ஜெர்மனி அணிகள் மோதின. ஏற்கனவே நான்கு முறை உலகக் கோப்பை வென்றிருக்கும் பிரேசில் இறுதிப் போட்டியில் விளையாடியதால், அப்போது பலரும், தங்கள் அலுவலக வேலையை ராஜினாமா செய்துவிட்டு நேரில் போட்டியைச் சென்று பார்த்த சம்பவங்கள் அரங்கேறின.
5வது முறை சாம்பியன்
மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த ரசிகர்களின் ஆர்ப்பரித்த கோஷங்கள் இடையே, போட்டி தொடங்கியது. தொடக்கம் முதலே, பிரேசில் கை ஓங்கியிருக்க, ஜெர்மனி ஒருக்கட்டத்தில் அட்டாக் பாணியை தவிர்த்து, டிஃபென்ட செய்யத் தொடங்கியது. ஆனால், எதற்கும் அசராத பிரேசில் அணியில், ரொனால்டோ.. கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லீங்க.. இவரு வேற ரகம். பழைய பாட்ஷா. ரொனால்டோ 2 கோல்கள் அடிக்க, கோப்பையை கைப்பற்றியது பிரேசில். ஐந்து முறை உலக சாம்பியன் எனும் பெருமையையும் பெற்றது.
ரொனால்டின்ஹோ
அப்போட்டி முடிந்து சில நாட்கள் கழித்தும், கோப்பையை வென்றது குறித்தே சுற்றி சுற்றி செய்திகள் வெளியாகின. அப்போது தான், இறுதிப் போட்டிக்கு முன்பாக, தங்கள் மனைவி மற்றும் பெண் தோழிகளுடன் உடலுறவில் ஈடுபட்டதால் தான் பிரேசில், உலகக் கோப்பையை வென்றது என்று செய்திகள் வெளியாக நியூஸ் சென்சேஷனானது. உண்மையில் அவர்கள் போட்டிக்கு முன்பாக உடலுறவில் ஈடுபட்டார்களா என்று தெரியாது. ஆனால், அதே உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியவரும், பிரேசில் அணியின் முன்னாள் சூப்பர் ஸ்டாரான ரொனால்டின்ஹோ, போட்டிக்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவது நல்ல ரிசல்ட் கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்.
புத்துணர்ச்சி
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "நான் பார்சிலோனா அணிக்காக விளையாடிய காலத்தில், போட்டிக்கு முன்பாக எப்போதும் செக்ஸில் ஈடுபடுவேன். அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது. மாறாக, மறுநாள் நான் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விளையாடுவேன். அந்த உணர்வு என்னை போட்டி அன்று முழுவதும் மனநிறைவுடன் வைத்திருக்கும்" என்று கூறியிருக்கிறார்.