
8வது சீசன் தொடர்
தற்போது 8வது ப்ரோ கபடி லீக் தொடர் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெற திட்டமிட்டு வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் மோதிக்கொள்ளும் இந்த தொடரில் 161 வீரர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். மொத்தம் 59 வீரர்கள் தங்களுடைய அணிகளால் தக்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிகேஎல் ஏலம்
இந்நிலையில் கடந்த 2 சீசனில் இடம் பிடித்த வீரர்கள் உள்பட தக்கவைக்கபடாத வீரர்களுக்கான ஏலம் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி முதல் 31ம் தேதிவரை மும்பையில் நடைபெற்றது. ஏலத்தில் ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வீரர்களின் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.4.4 கோடி செலவு செய்யலாம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்கள் இடம் பெற அனுமதிக்கப்பட்டது.

தமிழ் தலைவாஸ்
3 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஏலத்தில் தமிழ் தலைவாஸ் அணி நட்சத்திர வீரர்களை களமிறக்கியுள்ளது. குறிப்பாக இளம் ரைடர்கள் மீது அதிக தொகையை தமிழ் தலைவாஸ் அணி முதலீடு செய்துள்ளது. அதன்படி மன்ஜீத் ரூ.92 லட்சம், கே.பிரபஞ்சன் ரூ.71 லட்சம், அதுல் எம்.எஸ் ரூ.30 லட்சம், அஜிங்கியா அசோக் பவார் ரூ.19.5 லட்சம், பவானி ராஜ்புட் ரூ.10லட்சம் ஆகியோரை ரைடர்களுக்காக எடுத்துள்ளது.

ஆல்ரவுண்டர்
இதுமட்டுமல்லாமல், அனுபவ வீரரான சுஜ்ரீத் சிங்கை டிஃபன்ஸுக்காக ரூ.75 லட்சத்திற்கு எடுத்துள்ளது. முகமது துஹின், சஹில் ஆகியோர் டிஃபன்ஸுக்காக ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதே போல ஆல்ரவுண்டர்களாக ரூ.15 லட்சம், அன்வர் சஹீத் பாபா ரூ.10 லட்சம், சாகர் ரூ.10 லட்சம் மற்றும் சாதப்பன்செல்வம் ரூ.10 லட்சம் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். டிஃபண்டர்களான ஹிமான்ஷு, அபிஷேக், சாகர் ஆகியோரை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இளம் வீரர்களை அதிகளவில் களமிறக்கியுள்ளதால், தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை புது உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











