ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று நான்காம் நாளில் கால் வைத்துள்ளது. இந்தியா இது வரை 10 பதக்கங்ககளை பெற்றுள்ளது. முதல் நாள் 2 பதக்கங்கள், இரண்டாம் நாள் 3 பதக்கங்கள், நான்காம் நாள் 5 பதக்கங்கள் என பதக்கங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதே சமயம், துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளில் மட்டுமே 9 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதிகம் அறியப்படாத செபக்டக்ராவ் என்ற விளையாட்டில் நேற்று ஒரு வெண்கலம் கிடைத்தது. வுஷு விளையாட்டில் நான்கு பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. அவை தங்கமாக கிடைத்தால் இந்தியாவிற்கு பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கும்.
நான்காம் நாள் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் நேர அட்டவணையை கீழே காணலாம்.
வில்வித்தை
ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்
பிரிட்ஜ்
பீல்ட் ஹாக்கி
துப்பாக்கி சுடுதல்
நீச்சல்
டேக்வாண்டோ
டென்னிஸ்
வாலிபால்
மல்யுத்தம்
வுஷு