பிரிந்து சென்ற பாண்டியா
கடந்த ஜூலை 30ம் தேதி ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக்கிற்கு குழந்தை அகஸ்தியா பிறந்த நிலையில், ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், குழந்தையை பிரிந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஹர்திக் பாண்டியா யூஏஇ புறப்பட்டு சென்றார்.
மகனுடன் பாண்டியா
அதை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். இந்நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய பாண்டியா, தன்னுடைய மகன் அகஸ்தியாவை சந்தித்து மகிந்துள்ளார்.
வீடியோ பதிவு
முன்னதாக ஆஸ்திரேலியாவுடன் தான் விளையாடிய இறுதி டி20 போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியா, தன்னுடைய மகனை மற்றும் குடும்பத்தினரை தான் மிகவும் மிஸ் செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, குழந்தையுடன் அவர் கொஞ்சும் வீடியோவை அவருடைய பார்ட்னர் நடாஷா ஸ்டான்கோவிக் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பொறுப்பான பாண்டியா
இதேபோல ஹர்திக் பாண்டியாவும் பதிவு செய்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பாண்டியாவின் செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். குழந்தை பிறந்தவுடன் அவருக்கு பொறுப்பு வந்துவிட்டதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.