லக்னோ: புரோ கபடி லீக், 5வது சீசனில், இதுவரை நடந்துள்ள மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிக்கும், பெங்களூரு புல்ஸ் அணிக்கும் இடையேயான ஆட்டம். கடைசி விநாடியில், 30 - 28 என, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி வென்றது.
புரோ கபடி லீக் சீசன் 5ல், இரண்டு மண்டலங்களாக, 12 அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது மண்டலங்களுக்கு இடையேயான ஆட்டங்கள் நடந்து வருகின்றன.