ஜப்பான் சமாளிப்பு
முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஜப்பான் அரசு. ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என கூறி வந்தது. கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இந்த நிலையிலும், ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிப் போடுவதை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை என்றே கூறி வருகிறது.
தள்ளிப் போடும் முடிவு
இந்த நிலையில், ஒலிம்பிக் நிர்வாக கமிட்டியை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் ஒலிம்பிக் தொடரை தள்ளிப் போடுவதை பற்றி இப்போது தான் ஜப்பான் அரசு பேசத் துவங்கி உள்ளது என ரகசியத்தை உடைத்துள்ளனர். இது தான் நடக்கும் என முன்பே தெரிந்திருந்தாலும், ஜப்பான் இதை மூடி மறைத்து வருகிறது.
செலவு
பல்வேறு காலகட்டங்களுக்கு ஒலிம்பிக் தொடரை தள்ளி வைப்பது குறித்த திட்டங்களை ஜப்பான் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு கடும் செலவு ஆகும் என்பதால் அதையும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எந்த முடிவாக இருந்தாலும் ஜப்பான் விரைவாக எடுக்க வேண்டும்.
12 பில்லியன் டாலர்
காரணம், இதுவரை 3 பில்லியன் டாலர்கள் அளவுக்கு விளம்பரதாரர்கள் ஒலிம்பிக் தொடருக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதே போல இதுவரை 12 பில்லியன் டாலர்கள் ஒலிம்பிக் தொடருக்காக செலவு செய்யப்பட்டுள்ளது ஜப்பான்.
விளையாட்டு வீரர்கள் அழுத்தம்
ஆனால், தற்போது தொடரை ஆரம்பித்து பின் பாதியில் கொரோனா தாக்குதலால் நிறுத்துவதை விட, தொடரை தள்ளி வைப்பது நல்ல முடிவு. அதனால் ஜப்பான் அது குறித்து சிந்தித்து வருகிறது. மேலும், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் தொடரை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.