ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்ததையடுத்து 14-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இப்போட்டிகளில் 164 நாடுகளில் 4,294 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 20 விளையாட்டுகளில் 503 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த ஒலிம்பிக்கில் சீனா 282 பேரை களமிறக்கியது.
பாரா ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நிறைவடைந்தது. இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் சீனா 95 தங்கங்களையும் 71 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 231 பதக்கங்களை பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
ரஷியா 36 தங்கம் உள்பட 102 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 34 தங்கம் உள்பட 120 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றன. பிரதான ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா 31 தங்கம், 29 வெள்ளி, 38 வெண்கலம் என்று 98 பதக்கத்துடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இந்தியா சார்பில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் கிரிஷா வெள்ளிப் பதக்கம் வென்றார். வேறு யாருக்கும் பதக்கம் கிடைக்கவில்லை. பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய குழுவினர் நாளை காலை இந்தியா திரும்புகின்றனர்