
உன்னாலே உன்னாலே...
டெல்லி போலீஸ் காவலில் இருந்தபோது நேற்று ஸ்ரீசாந்த்துக்கும், சண்டிலாவுக்கும் இடையே முட்டிக் கொண்டு விட்டதாம். உன்னால்தான் இத்தனை பிரச்சினையும் எனக்கு வந்தது. உன்னால்தான் நான் சீரழிந்து போனேன் என்று சண்டிலாவைப் பார்த்து சொல்லியபடி இருந்தாராம் ஸ்ரீசாந்த்.

ஏய்.. நிப்பாட்டு
ஸ்ரீசாந்த் பேசியதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சண்டிலாவுக்கு அவர் தொடர்ந்து தன்னை குறை கூறியதால் கோபம் வந்து விட்டது. உடனே ஸ்ரீசாந்த்தை பார்த்து கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி பதிலடி கொடுக்கஆரம்பித்தார்.

சண்டையோ சண்டை
இதற்கு ஸ்ரீசாந்த்தும் பதிலுக்குப் பேச அந்த இடமே மீன் கடை போல மாறி விட்டதாம். இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டனராம்.

ஆர்டர் ஆர்டர் ஆர்டர்
இதைப் பார்த் போலீஸ் அதிகாரிகள் ரசாபாசமாகி விடாமல் தடுக்கும் வகையில் இருவரையும் அமைதிப் படுத்தி தள்ளித் தள்ளி உட்கார வைத்தனராம்.


Click it and Unblock the Notifications