சீனாவிலிருந்து கிளம்பிய கொரோனாவைரஸ்
சீனாவில் தற்போது கொரோனாவைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து விட்டதால், அங்கு வயதானவர்களுக்கு உடம்பை நன்றாக வைத்துக் கொள்வது தொடர்பான உடற்பயிற்சிகள் தரப்படுவது துவங்கியுள்ளது. இதற்காக அங்கு தாய் சி என்ற தற்காப்புக் கலை பயன்படுகிறது. இது உடலை நன்றாக வைத்துக் கொள்வதற்கான கலையாகும். கிட்டத்தட்ட குங்பூ போன்றது.
கை கொடுக்கம் தாய் சி
இந்த தாய் சி பயிற்சியில் வயதானவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். 70 வயது உடையவர்களும் கூட இதைச் செய்கின்றனர். இதுகுறித்து 70 வயதான கியூ சுயுயாங் என்பவர் கூறுகையில், நாங்கள் இத்தனை நாட்களாக இதை மிஸ் செய்தோம். இப்போது மீண்டும் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் தாய் சி செய்ய ஆரம்பித்துள்ளோம் என்றார்.
வீசேட் மூலம் பேச்சு
சமூக தனித்திருத்தல் சமயத்தின்போது நாங்கள் வீசேட் மூலமாகத்தான் பேசிக் கொள்ள முடிந்தது. பலரையும் அதில்தான் பிடிக்க முடிந்தது. பலர் இந்த ஊரை விட்டு போய் விட்டனர். சிலர் மட்டுமே உள்ளனர். இருப்பவர்களை வைத்து மீண்டும் தாய் சியை ஆரம்பித்து விட்டோம் என்றார். இவரது நண்பர் ஒருவருக்கு 80 வயதாகிறதாம். அவர் கடந்த 40 வருடமாக தாய் சி செய்து வருகிறாராம்.
பெரிய பூங்காவில் தாய் சி
யின்சுவான் நகரில் உள்ள மிகப் பெரிய பூங்கா ஸோங்ஷான் பூங்கா. அங்குதான் பலரும் தாய் சி செய்கின்றனர். இந்த பூஙகாவில் உள்ள ஸ்கொயர் டான்சிங், ரோலர் ஸ்கேட்டிங் பகுதிகள் மார்ச் மாத கடைசியிலிருந்தே பிசியாக ஆரம்பித்து விட்டது. வழக்கம் போல பலரும் உடற்பயிற்சிக்காக இந்த பூங்காவுக்கு வர ஆரம்பித்து விட்டனர்.
நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்
கியூ மேலும் கூறுகையில், நான் தனித்து வாழ்ந்து வருகிறேன். என்னைப் போலத்தான் பலரும் உள்ளனர். அனைவருமே நல்ல நண்பர்களாக உள்ளனர். இங்கு வந்துதான் பலர் நண்பர்களானோம். நிறையப் பேசுவோம். தாய் சி செய்வதால் உடல் மட்டுமல்ல மனசும் கூட நன்றாக இருக்கும். என்னை மேலும் பொலிவாக்கியதில் தாய் சிக்கு முக்கியப் பங்குண்டு என்று தெரிவித்தார்.
முதியவர்களுக்கு ஆறுதல்
கொரோனாவைரஸால் முடங்கிப் போயிருந்த சீன மக்களுக்கு மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான். இருந்தாலும் இன்னும் கூட முன்னெச்சரிக்கையாகவே அவர்கள் உள்ளனராம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்தான் இதுபோன்ற உடற்பயிற்சிக் கலையையும் கூட அவர்கள் பொது இடங்களில் செய்து வருகின்றனராம். சீக்கிரம் நம்ம நாட்டிலும் இயல்பு நிலை திரும்பட்டும். கொரோனாவைரஸால் முடங்கிப் போயிருந்த சீன மக்களுக்கு மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான். இருந்தாலும் இன்னும் கூட முன்னெச்சரிக்கையாகவே அவர்கள் உள்ளனராம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்தான் இதுபோன்ற உடற்பயிற்சிக் கலையையும் கூட அவர்கள் பொது இடங்களில் செய்து வருகின்றனராம். சீக்கிரம் நம்ம நாட்டிலும் இயல்பு நிலை திரும்பட்டும்.