
உலக தடகளப் போட்டிகள்
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியுடன், ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 100 மீட்டர் ஓட்டத்தில், வெண்கலம் வென்றபோது, உலகமே அதிர்ந்தது. அவர் கடைசியாக பங்கேற்ற, 100 மீட்டர் தொடர் ஓட்டத்தின்போது, திடீரென தசைபிடிப்பு ஏற்பட்டு, மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

தன் சாதனையை தானே முறியடித்தவர்
உலக சாதனைகளை முறியடித்ததுடன், அவற்றை மீண்டும் மீண்டும் தானே முறியடித்தவர் போல்ட். அவருடைய சாதனைகளை முறியடிக்க பல ஆண்டுகளாகலாம்.

ஏமாற்றம் இல்லை.. மாற்றமும் இல்லை
கடைசி போட்டியில் தங்கம் வெல்லாததால், அவர் மீண்டும் களத்தில் இறங்குவாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், தனது முடிவில் மாற்றமில்லை என்று, போல்ட் உறுதியுடன் கூறியுள்ளார்.

அசிங்கப்பட விரும்பவில்லை
"பலர் ஓய்வு பெற்றதை நான் பார்த்துள்ளேன். ஆனால், சில ஆண்டுகளில், ஏன் சில மாதங்களில் மீண்டும் களத்தில் இறங்குவார்கள். ஆனால், அதுபோன்று செய்து, அசிங்கப்பட விரும்பவில்லை. ஓய்வு என்ற முடிவில் மாற்றமில்லை.

திருப்தியுடன் கிளம்புகிறேன்
இந்த ஒரு போட்டியினால், நான் இதுவரை செய்தது மறைந்து விடப் போவதில்லை. முழு மனத் திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன். இதுதான், களத்தில் போட்டியாளராக நான் களமிறங்குவது கடைசி. ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் போல்ட்.


Click it and Unblock the Notifications











