டொரோண்டோ : செரீனா வில்லியம்ஸ் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக, டென்னிஸ் கனடா அமைப்பு அறிவித்துள்ளது. அதே போல தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வரும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ரோஜர்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.
செரீனா வில்லியம்ஸ், சென்ற வாரம் நடைபெற்ற சிலிக்கான் வேலி கிளாசிக் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், ஜோஹனா கொன்டாவிடம் தன் வாழ்நாளின் மோசமான தோல்வியை தழுவினார். அந்த போட்டியில் 6-1, 6-0 என ஜோஹனா வெற்றி பெற்றார். வெறும் ஒரு கேமில் மட்டுமே வென்ற செரீனா, தொடர்ந்து 12 கேம்களை இழந்து தோல்வி அடைந்தார்.