எப்போது தொடங்கும்
ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்க ஓபன் போட்டிகள் தொடங்கும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக அதில் குழப்பம் நிலவுகிறது. விரைவில் இதுதொடர்பான உறுதியான தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடந்தால் நிச்சயம் அதில் கலந்து கொண்டு ஆட செரீனா தயாராக இருக்கிறாராம்.
ரபேல் வர வாய்ப்பில்லை
அதேசமயம், நடப்பு சாம்பியன் ரபேல் நடால் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இல்லை. நியூயார்க் நகரம்தான் கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரம். எனவே ரிஸ்க் எடுத்து வந்து ஆட அவர் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் வருவதற்கு ஆர்வமாக உள்ளாராம்.
24வது பட்டம்
செரீனா வில்லியம்ஸ் கடந்த முறை 2வது இடத்தையே பெற முடிந்தது. கடந்த முறை இறுதிப் போட்டியில் தோற்றதை இந்த முறை பிடித்து விட அவர் ஆர்வமாக உள்ளாராம். இந்த முறை அவர் பட்டம் வென்றால் அது அவருக்கு 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். எனவே கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனைக்கும் அவர் ஆயத்தமாகி வருகிறார். வீட்டிலேயே அவர் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
உடம்பு நல்லாருக்கு
கடந்த 2017ம் ஆண்டுதான் செரீனாவுக்கு அலெக்ஸிஸ் ஒலிம்பியா என்ற மகள் பிறந்தார். அதன் பிறகும் கூட அவர் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு உடம்பை ஃபிட்டாக வைத்துள்ளார். எனவே போட்டிகள் எப்போது தொடங்கினாலும் விளையாடும் தகுதியுடன் செரீனா இருப்பதாக பாட்ரிக் கூறுகிறார். அதேசமயம், 3 வார காலம் அவர் தனது மகளைப் பிரிந்து இருக்க வேண்டும். அது ஒன்றுதான் உணர்ச்சிப் பூர்வமானது என்றும் பாட்ரிக் கூறுகிறார்.