3 ஆண்டுகளாக காயம்
இது தொடர்பாக ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், அடுத்த வாரம் லண்டனில் தொடங்க உள்ள லேவர்ஸ் கோப்பை போட்டியுடன் டென்னிஸ் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகள் எனக்கு எத்தனை காயங்கள், அறுவை சிகிச்சை நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.
1500 போட்டிகள்
அதையும் மீறி, டென்னிஸ் களத்திற்கு திரும்ப கடுமையாக முயற்சித்தேன். ஆனால் என்னுடைய உடல் ஒத்துழைக்கவல்லை. என்னுடைய உடல் எவ்வளவு தாங்கும் என்ற எல்லை எனக்கு தெரியும். அதனால் தான் இந்த ஓய்வு முடிவை எடுத்தேன். 24 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். டென்னிஸ் என் வாழ்க்கையில் நினைக்காதது எல்லாம் கொடுத்து இருக்கிறது.
பால் பாய்
நல்ல நண்பர்கள், ரசிகர்கள் என அனைத்தையும் கொடுத்தது இந்த டென்னிஸ் தான். என் வாழ்க்கை பயணத்தில் என்னுடன் இருக்கும் மனைவி மிர்கா மற்றும் என் குழந்தைகளுக்கு நன்றி. சிறு வயதில் டென்னிஸ் பந்தை எடுத்து கொடுக்கும் Ball boy ஆக என்னுடைய பயணத்தை தொடங்கினேன். டென்னிஸ் மீதான ஆர்வத்தால் கடுமையாக உழைத்தேன்,
முழு வாழ்க்கை
உழைப்பின் பயனாக எனக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி பல சாதனைகளை படைக்கும் உத்வேகத்தை கொடுத்தது. என் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டேன் போன்ற ஒரு மனநிலை கொடுத்து இருக்கிறது. சிரிப்பு, அழுகை, வெற்றி, தோல்வி என அனைத்தையும் இந்த டென்னிஸ் கொடுத்திருக்கிறது. 40 நாடுகளில் விளையாடியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். டென்னிஸ் நான் உன்னை காதலிக்கிறேன். உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் என்று தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.