கடும் நெருக்கடி
பாகிஸ்தான் அணி போட்டி தொடங்கியதில் இருந்து ரன்களை குவிக்க கடுமையாக தடுமாறியது. பாகிஸ்தான் அடித்த பந்துகள் எல்லாம் இங்கிலாந்து ஃபில்டர்களை நோக்கி கேட்ச் ஆனது. குறிப்பாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆதில் ரசித், சாம் கரன் ஆகியோர் அபாரமாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர்.
கூட்டு முயற்சி
இந்த நிலையில் இங்கிலாந்தின் செயல்பாடு குறித்து பேசிய ஆதில் ரசித், இது இங்கிலாந்து அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். நாங்கள் எங்களுடைய பணியை சரியாக செய்திருக்கிறோம் என நினைக்கிறேன். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை முன் கூட்டியே ஆய்வு செய்து அதற்கு ஏற்ப நாங்கள் பந்துகளை வீசினோம்.
என்னுடைய பலம்
நான் பந்துகளை மெதுவாக வீசினேன். அதுதான் என்னுடைய பலம். பந்துகளை மெதுவாக வீசும் போது விக்கெட்டுகள் கிடைக்கின்றன. மைதானத்தில் பவுண்டரி எல்லை மிகவும் பெரியதாக இருந்தது. அதனால் அந்த இடத்தில் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் வகையில் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினேன்.
மகிழ்ச்சி
137 ரன்களில் பாகிஸ்தானை நாங்கள் சுருட்டியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய பேட்ஸ்மேன்களும் இந்த ரன்களை எட்டு வார்கள் என நினைக்கிறேன் என்று கூறினார். இங்கிலாந்தின் பந்துவீச்சில் கடைசி ஐந்து ஓவரில் 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது.