டெல்லி: இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பை பைனல்ஸ் போட்டி, அதிரடி நாயகனாக, மேட்ச் வின்னராக தினேஷ் கார்த்திக்கை உருவாக்கியது. அதே நேரத்தில் இந்தத் தொடர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தரையும் எங்கேயோ கொண்டு சென்றுள்ளது.
இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி நடந்த நிதாஸ் கோப்பை டி-20 போட்டித் தொடரில் இந்தியா கோப்பையை வென்றது. பைனல்ஸில் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடி, கிரிக்கெட் உலகை தனது பக்கம் பார்க்க வைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.