புதிய சாதனை
இதுவரை 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் மட்டுமே, ஒருதினப் போட்டிகளில், 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளனர். இந்த மைல்கல்லை எட்டுவதற்கு தோனிக்கு மேலும் 33 ரன்கள் மட்டுமே தேவை. 50க்கும் மேற்பட்ட சராசரியுடன், 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரராகவும் தோனி விளங்குவார்.
நெருங்க முடியாத சச்சின்
கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தான், 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரராவார். அவர் 463 போட்டிகளில், 18,426 ரன்களை எடுத்துள்ளார். வங்கப் புலி சவுரவ் கங்குலி 311 போட்டிகளில் 11,363 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிட் 344 போட்டிகளில், 10,889 ரன்கள் எடுத்துள்ளார்.
10 ஆயிரம் ரன் குவித்தவர்கள்
இலங்கையின் குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் சனத் ஜெயசூர்யா, இலங்கையின் மகேல ஜெயவர்த்தனே, பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக், தென்னாப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா, இலங்கையின் திலகரத்னே தில்ஷான் ஆகியோர் மட்டுமே இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னாவும் தயார்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருதினப் போட்டியிலேயே இந்த புதிய மைல்கல்லை தோனி எட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். தினேஷ் கார்த்திக் மேலும் 4 ரன்கள் எடுத்தால், 1500 ரன்களை கடப்பார். 8000 ரன்களை கடப்பதற்கு சுரேஷ் ரெய்னாவுக்கு 60 ரன்கள் தேவை. அவர்களுக்கும் இந்தத் தொடரிலேயே இந்த சாதனையை எட்ட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.