அகமதாபாத்
கடந்த 2015ம் ஆண்டும் மூடப்பட்ட சர்தார் பட்டேல் மைதானம், மறுசீரமைப்பு செய்யப்பட்டு தற்போது மொய்திரா என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 1,10,000 பேர் வரை அமரக்கூடிய இந்த மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும். இந்தியா - இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் போட்டிதான் இங்கு நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும்.
பலகலிரவு டெஸ்ட்
இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். அதே போல இதற்கு முன்னர் இந்திய அணி ஒரே ஒரு முறை வங்கதேசத்துடன் பகலிரவு போட்டியில் ஆடியுள்ளது. அப்போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு பகலிரவு டெஸ்டில் ஓரளவு அனுபவம் உள்ளது என்று கூறலாம்.
பிட்ச் நிலைமை
மொய்திரா மைதானத்தின் பிட்ச் குறித்து பேசியுள்ள புஜாரா, பார்ப்பதற்கு பிட்ச் நன்றாக தான் உள்ளது, ஆனால் கணிக்க முடியவில்லை. இதில் பந்து ஸ்விங் ஆகலாம், ஆகாமலும் போகலாம். இது போன்ற சூழ்நிலைகளில் இந்திய வீரர்களுக்கு அனுபவம் இல்லை. வெள்ளை பந்தில் மட்டுமே இதுவரை ஆடியுள்ளதால் இது புதிய அனுபவமாக இருக்கலாம்.
பந்துவீச்சு
பயிற்சியின் போது பந்தில் நல்ல வேகம் இருந்தது. எனினும் இது மாறக்கூடலாம். இந்திய வீரர்களுக்கு பிங்க் பந்தில் அனுபவம் இல்லை. பல்வேறு போட்டிகளில் 2வது பாதியில் தான் பிட்ச் குறித்து புரிந்துக்கொள்ள முடியும். அதனால் இந்திய வீரர்கள் முதல் இன்னிங்சை பயன்படுத்தி கற்றுக்கொள்வோம் என புஜாரா தெரிவித்துள்ளார்.