லண்டன் : இங்கிலாந்து அணியின் தேர்வுக் குழு தலைவர் எட் சீப் (Ed Chief), இங்கிலாந்தின் உள்ளூர் கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத அதில் ரஷிதை, டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்திருப்பது, கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் ரஷித், தானாகவே கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி, பதினெட்டு மாதங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காத ஒருவரை எப்படி டெஸ்ட் அணியில் சேர்க்கலாம்? என்பதே இந்த முடிவை எதிர்ப்பவர்கள் கேட்கும் கேள்வி.