சர்ச்சை ஏன்?
இரு அணிகளும் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் ஸ்பின்னர்கள் ஆதிக்கமே இருந்ததால் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது. கடந்த 54 ஆண்டுகளில் இரண்டே நாட்களில் ஒரு டெஸ்ட் போட்டி முடிவடைவது இது முதல் முறையாகும்.
விமர்சனங்கள்
இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் உருவாக்கலாம், ஆனால் இப்படி மிகவும் மோசமாக பிட்ச் உருவாக்குவது சரியில்லை என முன்னாள் வீரர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இங்கிலாந்து அணி ஒரு படி மேல் சென்று ஐசிசியிடம் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு அணிகளும் நாளை மோதவுள்ள 4வது டெஸ்ட் போட்டியில் பிட்ச் குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தாக்கு
இது குறித்து பேசியுள்ள அவர், ஒரு டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவடைந்து நான் கேள்விப்பட்டதில்லை. இந்தியா அவ்வளவு சிறப்பாக செயல்பட்டதா?. அகமதாபாத் பிட்ச் சரியானது என்றால் இந்திய அணி சிறப்பாகத்தான் ஆடியுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. இது போன்று பிட்ச் செய்யக்கூடாது. இந்த வெற்றியை ஆஸ்திரேலியாவுடன் பெற்ற வெற்றியை போன்று இந்தியா எடுத்துக்கொள்ள வேண்டாம். என சாடியுள்ளார்.
புகழ்ச்சி எதற்கு
டி20 போட்டியை விட மிகவும் குறைவான ரன்கள் இந்த டெஸ்ட் போட்டியில் வந்துள்ளது. ஒரே நாளில் 17 விக்கெட்கள் சரிந்துள்ளது. அந்த பிட்சில் ஜோ ரூட் போன்ற பேட்ஸ்மேனே 5 விக்கெட்கள் எடுத்த நிலையில், அஸ்வின், அக்ஷர் பட்டேல் எடுப்பதில் என்ன ஆச்சரியம் உள்ளது. அவர்களை ஏன் புகழ வேண்டும் என இன்சாம் உல் அக் தெரிவித்துள்ளார்.