டெல்லி: நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பஞ்சாப் போலீஸ் டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் டி-20 அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, கடந்தாண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் பைனல் வரை முன்னேறியது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அரை இறுதி ஆட்டத்தில், ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர், பலருடைய பாராட்டுகளையும் பெற்றார்.