எப்படி
இந்த நிலையில் சென்ற முறை அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். பல பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார். 2016ல் இவர் பயிற்சியாளராக தேர்வானார்.
யார் பயிற்சியாளர்
அப்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்துவிட்டு ரவி சாஸ்திரி பாங்காக் சென்றுவிட்டார். அவர் இந்தியாவில் இல்லை. அவரால் அவசரமாக பயிற்சியாளர் நேர்முக தேர்வுக்கு வர முடியவில்லை. இதனால் அப்போது இவரை வீடியோ கால் மூலம் தேர்வுக்குழு கேள்விகள் கேட்டு தேர்வு செய்தது.
இந்திய அணி
இந்த முறை இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதால் நேரடியாக இவரது விண்ணப்பம் பெறப்பட்டது. அதாவது மற்ற நபர்கள் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தாலும், ரவி சாஸ்திரி விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறப்பட்டது. நேரடியாக அவருக்கு நேர்முக தேர்வு மட்டும் நடத்தப்பட்டது.
ரவி சாஸ்திரி
இந்த முறை இந்திய அணியுடன் ரவி சாஸ்திரி மேற்கு இந்திய தீவுகளில் இருக்கிறார். அதனால் அவரால் இப்போது நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் ரவி சாஸ்திரி இந்த முறையும் வீடியோ காலில் தோன்றி பதில்களை வழங்கினார். அந்த ராசியோ என்னவோ மீண்டும் அவரே பயிற்சியாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.