எப்படி
உலகிலேயே இதுதான் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும். இங்கு இன்று நடக்கும் முதல் போட்டியே பிங்க் பால் போட்டியாகும். உலகிலேயே பெரிய மைதானத்தில் நடப்பதால் இதனால் இந்த ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
புனரமைப்பு
புனரமைப்பு பணிகளுக்கு பின் புது பொலிவுடன் இந்த மோதேரா மைதானம் இன்று திறக்கப்பட்டது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் திறக்கப்பட்டது. இந்த மோதேரா மைதானத்திற்கு முன்பு சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் ஸ்டேடியம் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது .இந்த நிலையில் மோதேரா மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
மோடி
இன்று மைதானம் திறக்கப்பட்ட நிலையில் அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் (Reliance End) என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மற்றொரு முனை அதானி (Adani End) என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெயர் எப்படி
இரண்டும் பவுலிங் போடும் முனைகள் ஆகும். அதேபோல் இருக்கைகள் இருக்கும் ஸ்டாண்ட்களும் ரிலையன்ஸ், அதானி நிறுவனங்களின் பெயர்களை கொண்டு இருக்கிறது. இந்த முனைகளுக்கு இப்படி பெயர் வைக்கப்பட்டு இருப்பது பெரிய வைரலாகி உள்ளது. இணையத்தில் பலரும் இதை விவாதம் செய்து வருகிறார்கள்.