ஒத்திவைக்கப்பட்ட தொடர்
தொடர்ந்த கொரோனா பாதிப்புகளை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை ஐபிஎல் 2021 தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது வீடுகளுக்கும் நாடுகளுக்கும் திரும்பியுள்ளனர். இன்றைய தினம் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு
நியூசிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர் ட்ரெண்ட் போல்ட் ஆக்லாந்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட மற்றும் உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் இந்தியா மற்றும் அதன் ரசிகர்கள் தனக்கு ஒரு மனிதனாகவும் கிரிக்கெட் வீரராகவும் எல்லாவற்றையும் கொடுத்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
விரைவில் மாறும்
இந்திய ரசிகர்களிடம் இருந்து எப்போதும் தனக்கு கிடைக்கும் ஆதரவு பாராட்டுக்குரியது என்றும் இந்தியாவின் நெருக்கடியான இந்த சூழல் விரைவில் மாறும் என்றும் போல்ட் மேலும் கூறியுள்ளார். தான் இந்த அழகான நாட்டிற்கு மீண்டும் திரும்பி வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்சுக்கு நன்றி
ஐபிஎல்லின்போது ஒவ்வொரு வீரரின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அவர் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளவும் மற்றவருக்கு ஆதரவாக செயல்படவும் வலிமையாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.