தென்னாப்பிரிக்க தொடர்
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என இழந்தது. 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 5-1 என இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கி இருக்கிறது.
பவுலிங்
இந்திய அணி இந்த முறை வேகப்பந்து வீச்சை நம்பி களம் இறங்கியுள்ளது. குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஐபிஎல் புயல் ஜெயதேவ் உனட்கட் அணியில் சேர்ந்துள்ளார்.
|
மீண்டும் வந்த குட்டி தல
அதேபோல் அணியில் ரெய்னா மீண்டும் விளையாடுகிறார்கள். அவர் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் இவர் யோயோ டெஸ்டில் கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
இந்தியா வெற்றி
இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டி-20ல் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.