சிறப்பான அணி
இந்திய அணி, அனைத்து வகையிலும் சிறப்பானதாக உள்ளது. அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள், ஃபீல்டர்கள், உலக தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் அந்த அணியிலுள்ளனர்.
வேகப்பந்து
வேகப்பந்து வீச்சில், ஆஷிஷ் நெக்ஹா மற்றும் பும்ரா இருவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். அனைத்து துறைகளிலுமே சிறப்பான அணியாக உள்ள இந்தியாவை எதிர்கொள்வது ஆஸ்திரேலியாவுக்கு சவாலானது. இவ்வாறு வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஆஸி.யுடன் மோதல்
மார்ச் 27ம் தேதி, மொகாலியில், நடைபெற உள்ள, உலக கோப்பை டி20 போட்டித்தொடரின் லீக் ஆட்டத்தில், இந்தியாவை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வாட்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒயிட்வாஷ்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வெற்றி வாகை சூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிடம் தோற்றது
அதேநேரம், சொந்த மண்ணில், கத்துக்குட்டி வீரர்களோடு வந்த இலங்கையிடம் முதல் டி20 போட்டியில் (நேற்று) தோற்றுள்ள நிலையில், வாட்சன் இவ்வாறு கூறியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போலத்தான் உள்ளது.