
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சதம்
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளன்று இங்கிலாந்து அணி 657 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணியைச் சேர்ந்த கிராலே 122, டக்கெட் 107, ஓலி போப் 108 மற்றும் ஹாரி ப்ரூக் 153 என 4 வீரர்கல் சதம் விளாசினர். இதன் பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்
பாகிஸ்தான் அணியில் ஷஃபிக் 114, இமாம் உல் ஹக் 121, பாபர் அசாம் 136 ரன்கள் என 3 பேர் சதம் விளாசினர். ராவல்பிண்டி பிட்ச் சாதாரண சிமெண்ட் சாலை போல இருப்பதால், பேட்ஸ்மேன்கள் எளிதாக சதம் விளாச முடிகிறது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை காப்பாற்றுவதற்காக, பிசிபி நிர்வாகம் இதுபோன்ற ஃபிளாட் பிட்ச்களை தயார் செய்வதாகவும் இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பாக். விமர்சகர் ட்வீட்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆர்வலர் ஒருவர், ஆசிய மைதானங்களை கடந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விடவும் பாகிஸ்தானின் யாசிர் ஷா அதிக சதங்களை விளாசியுள்ளார். அதனால் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ஃபிளாட் டிராக்களில் விளையாடுவதை பற்றி பேச தேவையில்லை என்று பதிவிட்டிருந்தார்.

அமித் மிஸ்ரா ட்வீட்
இதற்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய அமித் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். அமித் மிஸ்தா தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை வெல்வதற்கு 3 கேப்டன்களும், 24 ஆண்டுகளும் தேவைப்பட்டது.

தோனி பற்றி அமித் மிஸ்ரா
ஆனால் தோனி தனிஒருவராக மூன்று கோப்பைகளையும் 7 ஆண்டுகளுக்குள் கைப்பற்றிவிட்டார். அதனால் சத்தம் போடாமல் அமைதி இருக்கவும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.அதேபோல் ஆசியாவை கடந்து மற்ற நாடுகளில் தோனி சதம் விளாசுவதை கடந்து கோப்பைகள் முக்கியம் என்பதும் மறைமுக பதிலடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











