வாவ்.. என்ன ஒரு வெல்கம்.. இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவில் கிடைத்த வித்தியாசமான வரவேற்பு!
Recommended Video

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. இந்திய விளையாடும் தொடரில் இந்த வருடம் இதுதான் மிகவும் பெரிய தொடர் ஆகும்.
இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து இருக்கிறது. அதேபோல் 4 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது.
இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என இழந்தது. அதேபோல் இன்னும் 3 டி-20 போட்டிகள் வேறு இருக்கிறது.

சாதனை நடக்கும்
இதுவரை நடந்த 4 ஒருநாள் போட்டியில் இந்தியா மூன்றில் வென்றுள்ளது. தென்னாப்பிரிக்கா 1 போட்டியில் வென்றது. இன்னும் ஒரு போட்டியில் வென்று தொடரை வென்றால் கூட இந்தியா இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் செய்யாத புதிய சாதனையை செய்யும்.

பயிற்சி
இந்தத் தொடரில் 5 வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இதற்காக இந்திய அணி போர்ட் எலிசபெத் நகருக்குச் சென்றுள்ளது. அங்கு இந்திய அணி மிகவும் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறது.
வித்தியாசமான வரவேற்பு
தென்னாப்பிரிக்கா நகரம் இசைக்குப் பெயர் போன நகரம். அங்கு நிறைய மியூஸிக்கல் பேண்ட்கள் இருக்கிறது. அதைவைத்து இந்திய அணிக்கு மிகவும் வித்தியாசமான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

டான்ஸ் பாண்டியா
இந்த இசையைக் கேட்டதும் இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள். முக்கியமாகப் பாண்டிய டான்ஸ் ஆடிக்கொண்டே வந்தார். அதேபோல் சாஹல் அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டே சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications